"பிளஸ் டூ மதிப்பெண்ணில் திருப்தி இல்லாதவர்களுக்கு அக்டோபரில் தேர்வு" - அமைச்சர்

0 2841

பிளஸ் டூ மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு அக்டோபரில் சிறப்பு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அப்போதைய சூழலில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தால் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறப்பு தேர்வெழுதும் மாணவர்கள் கல்லூரிகளில் சேர முதலமைச்சரின் ஆலோசனைபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முன்னதாக, சோமரசம்பேட்டையிலுள்ள நடுநிலைப் பள்ளியில் மேம்படுத்தப்பட்ட வகுப்பறையை திறந்து வைத்து, உட்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னிலையில், சிலம்பம் சுற்றிய மாணவிகளை பாராட்டினார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments